தமிழ்நாட்டில் இன்று நோன்பு பெருநாள்.. பிறை தெரிந்ததாக அறிவித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Editorial
0
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் வெளியிட்ட அறிவிப்பில், "ஏற்கனவே பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் கோவை - சாரமேடு கரும்பு கடை  மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக செய்தி வந்தது அதை சற்று முன் விசாரித்து உன்மை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிறை அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடுகிறது.

தமிழகத்தில் ஷவ்வால் மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் பற்றிய அறிவிப்பு. 
பிறை தேட வேண்டிய நாளான 09.04.2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் கோவை - சாரமேடு கரும்பு கடை  மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09.04.2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10.04.2024  புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...