அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி நிலை என்ன? மாநில அளவில் மாணவர் போராட்டத்துக்கு தயாராகும் போராட்டக்குழு

Editorial
0


Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளியின் சீலை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த ஜனவரி 21ம் தேதி இரவு அதிகாரிகள் பள்ளியின் சீலையும் பூட்டையும் அகற்றினர். அருகில் வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் பேனர்களும் கிழிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் அதிராம்பட்டினம் பெண்கள், ஆண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் பள்ளி நிர்வாகம், வழக்கறிஞர்கள், போராட்டக் குழுவினர்  மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் காரணமாக இந்த வெற்றி கிடைத்தது.

சீல் அகற்றப்பட்டாலும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பள்ளி திறக்கப்படாமல் இருந்தது. மூன்று நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மாநில அளவில் இமாம் ஷாபி பழைய பள்ளி நில மீட்பு போராட்டத்தை நடத்துவதற்கு போராட்டக் குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

மாநில அளவில் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து வீரியமான போராட்டத்தை தொடர இருப்பதாக போராட்டக் குழுவினர் நம்மிடம் தெரிவித்தனர். மீண்டும் போராட்டம் ஏன் என கேட்டபோது மாவட்ட ஆட்சியர் இமாம் ஷாபி பழைய பள்ளி இட விவகாரம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு தாமதம் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...