அதிரையில் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களே.. ஜும்மா தொழுகை எங்கெல்லாம் நேரத்துக்கு நடைபெறுகிறது?

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஜமாத்துல் உலமா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதில் "தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளுடைய நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

வரும் மார்ச் மாதத்தில் முதல் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் (மார்ச் 1,8,15,22) +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. ஆதலால், தேர்வு எழுதும் மையங்களுக்கு அருகிலிருக்கும் பள்ளிவாசல்களில் மாணவர்கள் ஜூம்ஆ தொழுகையில் பங்கேற்க வசதியாக ஜூம்ஆ தொழுகை நேரத்தை இந்த நான்கு வாரங்களுக்கு மட்டும் சற்று தள்ளி வைக்கலாம்.

தாங்கள் இதுகுறித்து சுலந்தாலோசித்து தேர்வு எழுதும் மாணவர்கள் ஜுமுஆ தொழுதிடும் வாய்ப்பை பெறுவதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஆண்டு ஜுமுஆ தொழுகை நேரம் தள்ளி வைக்கப்பட்டதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத் தருகிறோம். நமது மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி உயர்கல்வியில் மென்மேலும் முன்னேற துஆச் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் அதிரையில் தேர்வுக்கு ஏற்ப சில ஜும்மா பள்ளிகளின் தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு..

1.A.J.பள்ளி குத்பா - 1:20pm
2.தரகர் தெரு முஹைதீன் ஜும்மா குத்பா - 1.20pm
3.இப்றாஹீம் பள்ளி - 1:20pm

அதே போன்று, இமாம் ஷாஃபி பள்ளி சார்பாக தேர்வு எழுதும் மாணவர்களை ஜும்ஆ தொழுகைக்காக பள்ளி வாகனம் மூலம் A.J.பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...