அதிரை திமுக அன்சர் கான் ஆக்கிரமித்த நிலம்.. அதிரை பிறை புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்க பறந்த உத்தரவு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை திமுக நகர துணை செயலாளர் அன்சர் கான் கடந்த ஜனவரி மாதம் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் உங்கள் இடம் அரசு புறம்போக்கு இடம் என சொல்லப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டதும் இதற்கு பதிலளித்த அன்சர் கான், "நிச்சயமாக நகராட்சி இடம்தான். நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நகராட்சி என்னிடம் கேட்கவில்லையே." என்றார்.

இந்த வீடியோ ஆதாரத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அதிரை பிறை புகார் அளித்திருந்தது. இந்த நிலையில் அன்சர் கான் ஆக்கிரமித்துள்ள நிலத்தை அளவிட நில அளவையருக்கு நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நில அளவையர் அளந்து கொடுத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

அதில், "திரு. நூருல் அகமது என்பவரின் கோரிக்கையின்படி புதுத்தெரு தென்புறம் மிஸ்கின் பள்ளி தெருவை சேர்ந்த அன்சர்கான் என்பவர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளார். மேற்படி ஆக்கிரமிப்பினை அகற்றும் பொருட்டு ஆக்கிரமிப்பினை அளந்து கொடுக்கும் படி நில அளவையருக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது. நில அளவையர் அளவீடு செய்து கொடுத்த உடன் ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...