அதிரை பிறை கருத்துக்கணிப்பு: கிராமங்களை இணைக்க 90.1% பேர் எதிர்ப்பு.. நகராட்சி தீர்மானத்தை தூக்கி வீசும் மக்கள்

Editorial
0
அதிரையில் இன்று நடைபெற உள்ள நகர சபை கூட்டத்தில் 3 கிராமங்களை இணைக்கும் தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள்.

அதில், "நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.)ஏரிப்புரக்கரை, 2) மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அதிரையோடு புதிதாக கிராமங்களை இணைப்பதை எதிர்த்து, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்களின் விருப்பத்தை அறிய அதிரை பிறை கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 90.1% பேர் இணைக்கக்கூடாது என்றும், 9.9% பேர் இணைக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...