அதிரை அர்டா நில சர்ச்சை.. மருத்துவமனையை தடுக்கிறதா நகராட்சி? வழக்கறிஞர் முஹம்மது தம்பி விளக்கம் (வீடியோ)

Editorial
0
வீடியோ:  
அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு அதிரை ஊரக மேம்பாட்டு சங்கம் (ARDA) சார்பில் அதிரை ஷிபா மருத்துவமனைக்கு என மெயின் ரோடு அருகே அரசு இரண்டாம் எண் பள்ளிக்கு பின்புறம் 1.34 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை அரசியல் பின்புலம் கொண்ட தனிநபர்கள் அப்போதைய பேரூராட்சி துணையோடு ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அரசு அர்டாவுக்கு நிலம் விற்பனை செய்ததை எதிர்த்து வீரகனேசன் என்பவர் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவ்வழக்கினை பட்டுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மேற்படி வீரகனேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போதைய நகராட்சி நிர்வாகமும் அர்டா நிலத்தை கையகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராகவும் அர்டா சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் சுற்றுச்சுவர் கட்டும் வேலை தொடங்கியது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம் உள்ளிட்டோர் சுற்றுச்சுவர் கட்டும் வேலையில் தடுத்ததாக ARDA புகாரளித்தது.

இந்த நிலையில் அர்டா நில விவகாரம் தொடர்பாக வழக்கு நடத்த நகராட்சி நிர்வாகம் மக்கள் வரிப் பணத்தில் ₹3 லட்சத்தை செலவிட கடந்த நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக வழக்கறிஞர் முஹம்மது தம்பி அதிரை பிறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...