ஸ்தம்பித்த அதிரை ரயில்நிலையம்.. ஓரணியில் திமுக, அதிமுக ஆர்ப்பாட்டம் - ரயில் போராளி ஜாபர் கர்ஜனை

Editorial
0
அதிராம்பட்டினத்திற்கு ரயில் சேவை மீண்டும் கிடைக்க முக்கிய காரணமானவரும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையில் ரயில் சேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவருமான அஹமது அலி ஜாபர், தன்னுடைய அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை என்ற அமைப்பு மூலமாக இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அதிரை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார்.
தாம்பரம் - செங்கோட்டை (20683/84) ரயில்களுக்கு நம் ஊரில் நிறுத்தம் அறிவிக்கவும், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை அதிரை வரை நீட்டிக்கவும், கூடுதல் ரயில் சேவைகளை அதிரை ரயில் நிலையத்திற்கு வழங்கவும் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிரைக்கு ரயில் சேவை வழங்கக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
 இதில் திமுக நகர செயலாளர் குணசேகரன், அதிமுக நகர செயலாளர் பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் அஹமது தமீம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இறுதியாக பேசிய ரயில் போராளி அஹமது அலி ஜாபர், ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். இதில் நூற்றுக்கணக்கான அதிரை மக்கள் கலந்துகொண்டார்கள். 20க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...