வஃபாத் அறிவிப்பு - மேலத்தெரு ஜெய்ன்ஷா அம்மாள்

Editorial
0
மேலத்தெரு சேக்கனா வீட்டை சேர்ந்த மர்ஹூம்  நவ்தா என்கிற கா.செ.செய்யது முகமது அவர்களின் மகளும், கீழத்தெரு பட்டாணி வீட்டை சேர்ந்த மர்ஹூம் I.நிஜாம் முகமது அவர்களின் மனைவியும்,  S. நெய்னா முகமது, S. அஸ்ரஃப் அலி, S. ஜமால் முகமது, S. முகமது இக்பால் ஆகியோரின் சகோதரியும், M. ராஜிக் முகமது அவர்களின் மாமியாரும், 
N. ஹாஜா ஷரீபு, N. தாஜுதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஜெய்ன்சா அம்மாள் அவர்கள் இன்று 29.07.2023 சனிக்கிழமை அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  இன்று 29.07.2023 சனிக் கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம். 

இறைவா! (அன்னாரை)
மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்ரை) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...