அதிரை நகராட்சி தலைவர் ஆகிறார் MMS அப்துல் கரீம் மனைவி

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல் திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் SDPI, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், பாஜக தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு வாரம் கடந்தும் அதிரை திமுகவில் இருக்கும் உள்கட்சிப் பூசல் காரணமாக நகர்மன்ற தலைவர் யார் என்ற இறுதி முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிரை நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதனிடையே அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியாகி இருக்கிறது.

அதே போல் நகர்மன்ற தலைவராக 10 வது வார்டில் வெற்றிபெற்ற MMS அப்துல் கரீமின் மனைவி தாஹிரா அம்மாள் திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளதால் இவர் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உறுதியாகி உள்ளது.

Post a Comment

2 Comments