அதிரையில் தொடங்கியது சிட்னி பிரீமியர் லீக் தொழிற்முறை கிரிக்கெட் தொடர் போட்டி

Editorial
0
அதிரையில் பல ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினாலும், பல்வேறு தொடர்களை நடத்துனாலும் நமதூரிலிருந்து மாநில அளவிலான அணிகளுக்கு செல்வதில்லை. இறுதியில் கிரிக்கெட் திறமையை மூட்டை கட்டிவிட்டு பொருளாதார தேவைக்காக வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். 

இந்த நிலையை மாற்றும் வகையில் நமதூர் சிறுவர்களை இளம் வயதிலேயே தொழில்முறை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் அதிரை சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. இதற்காக  STITCH பந்தில் விளையாட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றனர். நமதூர் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்காக சிட்னி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தினர்.

(விளம்பரம்:)

இந்த நிலையில் மேலும் ஒருபடி சென்று பிரபல தொழிற்முறை கிரிக்கெட் கிளப்புகள் பங்குபெறும் மாபெரும் தொழிற்முறை கிரிக்கெட் தொடரை சிட்னி அணியினர் இன்று தொடங்கியுள்ளனர். இதில் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஹாஜா சரீஃப், தமீம், யூசுப் அவர்கள், தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகி PMK தாஜூதீன், திமுக நகர தலைவர் இராம குணசேகரன் அவர்கள், SDPI கட்சியின் நகரத்தலைவர் அஸ்லம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு போட்டியினை துவங்கி வைத்தனர். இப்போட்டியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல தலைசிறந்த வீரர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

முதல் பரிசாக ₹50,000, இரண்டாம் பரிசாக ₹30,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹15,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...