அதிரையில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகைகளுடன் சிட்னி நடத்தும் பிரம்மாண்ட தொழிற்முறை கிரிக்கெட் தொடர்

அதிரையில் பல ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினாலும், பல்வேறு தொடர்களை நடத்துனாலும் நமதூரிலிருந்து மாநில அளவிலான அணிகளுக்கு செல்வதில்லை. இறுதியில் கிரிக்கெட் திறமையை மூட்டை கட்டிவிட்டு பொருளாதார தேவைக்காக வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். 

இந்த நிலையை மாற்றும் வகையில் நமதூர் சிறுவர்களை இளம் வயதிலேயே தொழில்முறை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் அதிரை சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. இதற்காக  STITCH பந்தில் விளையாட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றனர். நமதூர் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்காக சிட்னி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தினர்.

(விளம்பரம்:)

இந்த நிலையில் மேலும் ஒருபடி சென்று பிரபல தொழிற்முறை கிரிக்கெட் கிளப்புகள் பங்குபெறும் மாபெரும் தொழிற்முறை கிரிக்கெட் போட்டியை சிட்னி அணி நடத்த உள்ளது. இதற்கான முதல் பரிசாக ₹50,000, இரண்டாம் பரிசாக ₹30,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹15,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments