அதிரையின் முதல் ஹோமியோபதி மருத்துவர் அஹமத் முஹைதீன் தொடங்கும் ATM ஹோமியோ கிளினிக்

Editorial
0
அதிரை சி.எம்.பி. லேனை சேர்ந்த மர்ஹூம் அஹ்மத் தாஸீம் (தாஸீம் டிராவல்ஸ் உரிமையாளர்) அவர்களின் மகன் A.T.அஹமத் முகைதீன். சென்னை மற்றும் அதிரை இமாம் ஷாபி பள்ளியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்ட இவர் இளங்கலை ஹோமியோபதி மருத்துவப்படிப்பை சென்னையில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்தார். அதில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற சாதனை படைத்தார்.

முதுகலையில் (M.D) குழந்தைகள் நல ஹோமியோபதி மருத்துவப் படிப்பை கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நிறைவு செய்தார். பள்ளியில் முதன்மை மாணவராக திகழ்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகளை வென்றுள்ளார். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையையும் இவர் வெளியிட்டு இருக்கிறார்.

இளங்கலை மருத்துவம் முடித்தவுடன் தொலைப்பேசி வாயிலாகவும், அதிரைக்கு வரும் நாட்களில் தனது வீட்டிலேயே நோயாளிகளை வரவழைத்து மருத்துவ ஆலோசனைக்களை வழங்கியும் சிகிச்சையும் அளித்து வருகிறார்.

கொரோனா பரவலின்போதும் ஓய்வின்றி அதிரை மக்களுக்கு மருத்துவ சேவை செய்ததுடன், அர்செனிக் ஆல்பம் என்ற ஹோமியோபதி மருந்தையும் பரிந்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவருக்கு பின்னரே மற்ற மருத்துவர்களும் இந்த மருந்தை பரிந்துரைக்க தொடங்கினர்.

தற்போது அதிரை சி.எம்.பி.லேனில் உள்ள தனது வீட்டின் அருகிலேயே ATM என்ற பெயரில் தனியாக கிளினிக்கை தொடங்கியுள்ளார். 
அதன் திறப்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் நடைபெற உள்ளது. இங்கு காய்ச்சல், தலைவலி, இருமல், வயிற்றுப்போக்கு, சர்க்கரை வியாதி, தைராய்டு, அல்சர், பெண்கள் தொடர்பான பிரச்சனைகள், சைனஸ், மனநல பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட வியாதிகள், குறிப்பாக குழந்தைகளுக்கான பிரச்சனைகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க உள்ளார்.

காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மருத்துவரை அணுகி ஆலோசனைகளையும், சிகிச்சையையும் பெறலாம். முன்பதிவு செய்ய 7358051252 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...