திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து அதிரையில் SDPI ஆர்ப்பாட்டம்

Editorial
0


திரிபுராவில் முஸ்லிம்கள் மீது 
ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் SDPI கட்சி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (29.10.2021) அதிரை பெரிய ஜும்மா பள்ளி வாயிலில் ஜும்மா தொழுகைக்கு பிறகு கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது புஹாரி கண்டன உரையாற்றினார். 

இந்த போராட்டத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கக் கோரியும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள்.




என்ன நடந்தது திரிபுராவில்?

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்து கடந்த புதன்கிழமை பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த 3,500 க்கும் மேற்பட்டவர்கள் காவிக் கொடிகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறியை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், அவ்வழியாக கண்ணில் தென்பட்ட இஸ்லாமியர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். 

மேலும் அங்குள்ள மசூதிகள், இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து உடைத்ததாகவும், இதை தடுக்க சென்ற இஸ்லாமியர்களும் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விஷ்வ இந்து பரிஷத்தின் இந்த வன்முறை வெறியாட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட மசூதிகள் இலக்கானதாகவும், நூற்றுக்கணக்கான கடைகள், வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்ட மசூதிகள், கடைகள் சிலவற்றை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தீ வைத்து எரித்த காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


இவ்வாறு தாக்கப்பட்ட மசூதிகள், வீடுகளின் கதவுகளில் காவிக் கொடியை நட்டு வைத்து சென்று உள்ளனர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர். இந்த தாக்குதல் சம்பவத்தின் ராவோவில் உள்ள ஜமா மசூதியை நோக்கி தாக்குதல் நடத்த சென்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய வீட்டுக்குள் நுழைந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் 2 பேர் புகார் அளித்து உள்ளனர்.

கையில் வாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சுமந்து சென்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தல் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் போலீஸ் கண்முன்பாகவே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்கள் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு திரிபுரா, உனாகோட்டி, வட திரிபுரா, கோமதி, செபாஹிஜாலா உள்ளிட்ட பகுதிகள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் துணை அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இவை அனைத்தும் சிறிய சம்பவங்கள் என திரிபுரா வடக்கு மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...