அதிரை மர்யம் பள்ளியின் அழகை கண்டு மெய்சிலிர்த்த முன்னாள் எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி

Editorial
0

மனிதநேய ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி அதிராம்பட்டினம் வருகை தந்தார்.

அதிரை S.A.M. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மர்யம் பள்ளிக்கு அஸர் தொழுகைக்கு வந்த அவர், பள்ளியின் அழகையும், அழகின் எளிமையும் வியந்து பாராட்டினார்.



சூரிய வெளிச்சம் நிறைந்திடும் வகையில் பசுமை கட்டிடமாக இருப்பதை சுட்டிக்காட்டி அவர், இதற்கான மின் உபயோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சோலர் (சூரிய மின் உற்பத்தி ) அமைப்பை கண்டு வியந்தார்.

தமிழகத்தின் முதல் சோலார் மின் பள்ளி இதுவாகத்தான் இருக்க முடியும் எனக்கூறினார். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ள பள்ளிகளின் அமைப்பை போல் மர்யம் பள்ளி இருப்பதாகவும், எளிமையான வேலைப்பாடுகளுடன் கொண்ட அதன் அழகியலை வர்ணித்தார்.


இதில் மாதந்தோறும் சகோதர சமூக மக்களுடன் கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டால், அது சமூக நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்று யோசனை கூறினார்.


பிறகு பள்ளிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எதிரே அமைந்து  உள்ள மரைக்காயர் குளத்தை பார்வையிட்டவர், இதை சுற்றிலும் நடைப்பாதை அமைத்து , அழகாக மின் விளக்குகள், பசுமையான சூழலை ஏற்படுத்த மரங்களை வளர்த்தால் இப்பகுதி மேலும் பொழிவுபெறும் எனவும், இது தொடர்பாக தொகுதி MLA மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்.








Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...