அதிரை திமுக நிர்வாகி அன்சர் கான் செய்த சம்பவம்.. கொந்தளித்த மமக! எம்எல்ஏவிடம் பறந்த புகார்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினத்தில் மமக கட்சி நிர்வாகியை அவமதித்த திமுக நிர்வாகி அன்சர் கான் மீது நடவடிக்கை வேண்டி பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அன்னாதுறையிடம் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் எழுதிய புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது, "அதிராம்பட்டினத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03-2024) அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளரின் அழைப்பின் பேரில் எங்கள் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டனர். எங்கள் மாவட்ட தலைவரும் அதிராம்பட்டணம் நகர்மன்ற உறுப்பினருமான அப்துல் மாலிக் வேட்பாளருடன் வாகனத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகி AMY. அன்சர்கான் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வேட்பாளர் வாகனத்தில் ஏறக்கூடாது என்று தொடர்ந்து நிந்தித்து வந்துள்ளார். பரப்புரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பொதுமக்கள் மத்தியில் ஒருமையில் பேசி கூட்டணி கட்சி நிர்வாகிகளை கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

இந்நிகழ்வானது மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளான எங்களுக்கு தர்ம சங்கடத்தையும் மன உறுத்தலையும் ஏற்படுத்தியது. ஆனாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் AMY. அன்சர்கான் அவர்கள் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என சொல்லி ஒருமையில் பேசியுள்ளார்.

இதுபோன்ற கூட்டணி கட்சிகளை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது மிகவும் மனதுக்கு வருத்தத்தை அளிக்கின்றது. இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடும் அன்சர்கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...