அதிரை நகராட்சி ECRல் கொட்டி எரிக்கும் குப்பைகள் - அப்செட் ஆன அமைச்சர் மெய்யநாதன்! மேடையிலேயே முக்கிய அறிவிப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினத்தில் சேரும் குப்பைகள் கிழக்கு கடற்கரை சாலையில் பிலால் நகர் ரயில்வே கேட்டை தாண்டி சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. நாளடைவில் இது குப்பை மேடாக மாறி அப்பகுதியே புகை மூட்டமாக காட்சி தருகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல் அதன் அருகே உள்ள பட்டியலின மக்களும் பல்வேறு உடல் நலன் சார்ந்த இடையூறுகளை சந்திக்கின்றனர்.

இது தொடர்பாக அதிரை பிறையில் பலமுறை கட்டுரைகள் எழுதியும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று அதிரை கடற்கரை பணிகளை பார்வையிடுவதற்காக வந்த அமைச்சர் மெய்யநாதன் அதிரை அருகே நகராட்சியால் கொட்டப்படும் குப்பைமேடு பற்றி பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, "இயற்கையை நாம் துச்சமாக நினைக்கிறோம். மதிப்பதே இல்லை. வரும்போது கூட பார்த்தேன் அதிராம்பட்டினம் தாண்டி வலது பக்கம் குப்பை எரிந்து கொண்டிருக்கிறது. அடுத்து இரண்டு மூன்று இடங்களிலும் குப்பை தேங்கி கிடக்கிறது. இதற்கென ஒரு பொது இடத்தை பார்த்து மறுசுழற்சி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பை எரியும் போது அதில் இருக்கும் பிளாஸ்டிக் காரணமாக ஏசி காரில் போனாலும் அது நம்மை தாக்குகிறது. வயிற்றை ஏதோ செய்து விடுகிறது. இதை நாம் தடுக்க வேண்டும்." என்றார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...