அதிரை துறைமுகத்தில் 100 ஆண்டு முன்பே லட்சக்கணக்கில் வர்த்தகம் - அமைச்சர் மெய்யநாதனுக்கு விளக்கிய ஷம்சுல் இஸ்லாம் சங்கம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை கடற்கரையை பார்வையிட வருகை தந்த அமைச்சர் மெய்யநாதனை வரவேற்று ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் வழங்கிய கடிதத்தில் அதிரையின் கடல் வாணிப வரலாறு தொடர்பான வியப்பூட்டும் வரலாற்று அறிமுகத்தை குறிப்பிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில், "எங்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் 1920-ம் ஆண்டு துவங்கப்பட்டு சமூக, மக்கள் நலன் சார்ந்த சேவைகளில் தொடர்ச்சியாக இது நாள்வரை தொண்டாற்றி வருவதை அறிவீர்கள். எங்கள் முஹல்லா 16 பள்ளிவாசல்களின் ஜமாஅத் பகுதிகளை உள்ளடக்கியது.

அதிராம்பட்டினம் துறைமுகம் கடந்த நூற்றாண்டு வரை அயல்நாட்டு வணிகத்தில் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. அக்காலத்தில் 1900- 1910 ஆண்டுகளில் அக்கால பெருமதியில் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய்க்கான ஏற்றுமதி மற்றும் 3 லட்சம் ரூபாய்க்கான இறக்குமதி கடல் வாணிபம் நடந்திருக்கின்றன. வெள்ளையர்கள் காலத்து துறைமுக சுங்க கட்டிடங்கள் சிதைந்த எச்சங்களாக மிச்சமுள்ளன.

25 வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் பயன்படுத்தும் வகையில் இருந்த எழில் கொஞ்சும் கடற்கரை இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த கடற்கரையை மீட்டு மக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அமைத்துத் தர வருகை தந்திருக்கும் தங்களை உளவன்போடு வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...