அதிரையில் இன்று காவல் நிலையம் அருகிலேயே விபத்து.. மூதாட்டி மீது பைக்கைவிட்டு மோதிய இளைஞர்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை கிழக்குக் கடற்கரை சாலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று பிலால் நகர் பெட்ரோல் பங்க் எதிரே நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று அதிரை சேர்மன்வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட மெயின் ரோட்டில் விபத்து ஏற்பட்டு தாய், தந்தை, குழந்தை படுகாயம் அடைந்தனர்.

அதிரையில் தொடர்ந்து நடந்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த நிலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் காவல் நிலையம் அருகிலேயே விபத்து நடந்துள்ளது. காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...