அதிரை சேர்மன் வாடி அருகே மீண்டும் விபத்து.. அதிவேகமாக பைக்கில் வந்தவர்கள் மோதி தாய், தந்தை, குழந்தை படுகாயம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை கிழக்குக் கடற்கரை சாலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று பிலால் நகர் பெட்ரோல் பங்க் எதிரே நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் அதிரை சேர்மன்வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட மெயின் ரோட்டில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

பேருந்து நிலையம் நோக்கி பைக்கில் கணவன், மனைவி, குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக பைக்கில் வந்த நபர், அவர்கள் மீது மோதி சென்று விட்டதாகவும், இதில் தாய், தந்தை குழந்தை மூன்று பேரும் காயம் அடைந்து அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. அதிரையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சாலை விபத்துகள் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...