அதிரை மரியம் பள்ளி தெருவில் தொடரும் குழப்பம்.. நகராட்சியில் நம்பர் பற்றாக்குறையா?

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை ஒன்றாவது வார்டு மரியம் பள்ளி தெருவில் பல வீடுகளுக்கு ஒரே கதவு எண்களை கொடுத்து நகராட்சி நிர்வாகம் பொது மக்களை பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறது. வீட்டுக்கு வீடு வரி வசூல் செய்ய குழம்பாத நகராட்சி, கதவு எண்களை வழங்குவதில் மட்டும் குழப்பி எடுத்து வருவது வினோதமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தபால், கொரியர் மூலம் வரும் முக்கிய ஆவணங்கள் கடிதங்களை இழக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் பல்வேறு குழப்பங்களும் சிரமங்களும் தொடர்கின்றன. தபால்காரர்களும் இதன் காரணமாக குழப்பத்தில் உள்ளனர். ஒரு வீட்டுக்கு வரவேண்டிய கடிதமோ பொருளோ வேறு வீட்டில் சென்று முடங்கும் நிலை உள்ளது.  இது தொடர்பாக பல முறை நகராட்சியிலும் முறையிட்டும் அதிரை 1வது வார்டு மரியம் பள்ளி தெருவில் வீட்டு எண்களை நகராட்சி இதுவரை முறைப்படுத்தாமல் இருந்து வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...