அதிரை ஈசிஆர் சாலையில் இன்றும் பைக்குகள் மோதி விபத்து.. பைக் ஓட்டி சென்ற சிறுவன் உட்பட இருவர் காயம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை கிழக்குக் கடற்கரை சாலையில் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பிலால் நகர் பெட்ரோல் பங்க் எதிரே நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக அதிரை சேர்மன்வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட மெயின் ரோட்டில் விபத்து ஏற்பட்டு தாய், தந்தை, குழந்தை படுகாயம் அடைந்தனர். 

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் இன்று அதிரை கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள ஹவான் உணவகம் அருகே இரண்டு பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ராஜாமடத்தை சேர்ந்த நபர் ஒரு பைக்கிலும் அதிரையை சேர்ந்த சிறுவன் ஒரு பைக்கிலும் சென்று கொண்டிருந்தபோது இருவரும் மோதிக் கொண்டுள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...