அதிரைக்கு தொடர் புகழ் சேர்க்கும் கவியன்பன் கலாம்.. புத்தக கண்காட்சியில் வெளியான கவிதை புத்தகத்துக்காக பாராட்டு சான்று

Editorial
0
அதிரையை சேர்ந்தவர் அபுல்கலாம். 62 வயதாகும் இவர் கணக்கராக 40 ஆண்டுகள் அயல்நாட்டில் பணிபுரிந்தார். இப்பொழுது பணிநிறைவு செய்து அதிரை ஷிபா மருத்துவமனையில் கணக்கு தணிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். கவிதை மீது அதிக கொண்ட இவர் 1974 பள்ளி இறுதிப் படிப்பு முதல் மரபுக்கவிதை எழுதி வருகிறார். 1975 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வாயால் "கவியன்பன்" என்ற பட்டம் பெற்றார்.

கவிச்சுனை,  கவிச்சக்கரவர்த்தி, கவியரசர், கலைக்காவலர்,  நட்சத்திர மரபுக்கவிஞர்,  தமிழப்புலவர்,  யாப்புக்கவிஞர் போன்ற பல விருதுகளை பெற்று இருக்கிறார். வானலைத் தமிழ்த்தேர், துபாய் சங்கமம் தொலைக்காட்சி, துபாய் லண்டன் தமிழ் வானொலி பாமுகம், கவிதைநேரம், பாரதிநட்புக்காக கவிதைப்போட்டி,  அபுதாபி மதுரைத் தமிழ்ச் சங்கம் கவியரங்கம், அமுதசுரபி ஆண்டு விழா, கவியுலகப் பூஞ்சோலை ஆண்டுவிழா போன்ற கவியரங்குகளில் பங்குபெற்று உள்ளார்.

இனிய திசைகள், சென்னை தினத்தந்தி, துபாய் தமிழ்நெஞ்சம், ஃப்ரான்ஸ் தென்றல், அமெரிக்கா முகநூலில் "கவியருவி" எனும் குழுமம் நடத்தி மின்னிதழில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன.  இலங்கை தடாகம் கலை இலக்கிய கழகம்,  ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டிகளில் இவரது கலிதைக்குப் பரிசுகள் கிடைத்தன.

இந்த நிலையில் கடந்த 2023 மே 5 ஆம் தேதி INTERNATIONAL ACHIEVERS UNIVERSAL BOOK OF RECORDS APPRECIATION FOR TAMIL LITERATURE CERTIFICATE (உலக சாதனையாளர்கள் பட்டியலில் தமிழ் இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை போற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

 இந்த நிலையில் 250 கவிஞர்களின் பாக்களை உள்ளடக்கிய ஐந்திணை இருநூற்றி ஐம்பது எனும் தலைப்பில் வெளியான புத்தகத்தின்  ஐந்து திணைகளில் இவர் வாழும் நெய்தல் பற்றி இவர் எழுதியுள்ளது செய்யுளும் இடம் பெற்றது. இந்தப் புத்தகம் அண்மையில் சென்னை புத்தக கண்காட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள் அவர்களால் வெளியிடப்பட்டு  மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதற்காக பாராட்டு சான்றிதழை பெற்றிருக்கிறார் கவியன்பன் கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...