அதிரையில் 110kV துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் வீடுகள் தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ள காரணத்தால் இங்கிருந்த 33kv துணை மின்நிலையத்தில் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி மின் பழுதுகளும், தொடர் மின் தடைகளும் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில், அங்கு 110kv திறன்கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது 

ஆனால், டெண்டர் கோரப்படாமல் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை சந்தித்து அதிராம்பட்டினம் மக்கள் மனு வழங்கினர். இதனை தொடர்ந்து முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிராம்பட்டினத்தில் 110kv துணை மின் நிலையம் அமைப்பதற்கு டெண்டர்கோரும் பணிகளை தொடங்க எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக 110 kV மின் நிலையம் அமைக்கப்பட்டு 3 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிரை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 110 kV மின் நிலையம் உட்பட பல்வேறு மின் திட்ட பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...