அதிரை இமாம் ஷாபி பள்ளி இட விவகாரம்.. நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் அறிவித்த ஜமாத்துகள், இயக்கங்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

அதிரை பழைய இமாம் ஷாபி பள்ளி வளாகம் நகராட்சி நிலத்தில் குத்தகை எடுத்து பல ஆண்டுகளாக இது செயல்பட்டு வருகிறது. இதனை காலி செய்ய வேண்டும் என நகராட்சி அழுத்தம் கொடுத்து வந்தது. இதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு நடத்தி வந்தது. கடந்த நவம்பர் மாதம் அதிரை நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி நிலத்தை கைப்பற்ற நகராட்சி முடிவு செய்து ஆணையர் உள்ளிட்டோர் அங்கு நிலத்தை காலி செய்யுமாறு பதாகையுடன் சென்றனர். அப்போது சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அதிகாரிகளிடம் விசாரணை நீதிமன்றத்தை நாடி Execution petition வழங்கி நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர், முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகே அதை கையகப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனை அடுத்த பதாகையை வைக்காமலே அங்கிருந்து புறப்பட்ட நகராட்சி அதிகாரிகள், அடுத்த 2 தினங்களில் தவறான தேதியை குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். மறுபக்கம் இமாம் ஷாபி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றால் கேவியட் மனு தாக்கல் செய்திட ரூ.5 லட்சம் ஒதுக்கியது நகராட்சி.

இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்துக்கு அதிரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நாள். 21.11.2023 தேதியில் வழங்கப்பட்ட தீர்ப்புரையின்படி தடையாணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வானொலி பூங்கா இடத்தினை தங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் தற்போது இடம் நகராட்சிக்கு தேவையாக உள்ளதால் மேற்படி இடத்தினை காலி செய்து ஒப்படைக்க இவ்வலுலக அறிவிப்பின்படி அறிவுறுத்தப்பட்டும் இதுநாள்வரை காலி செய்து ஒப்படைக்காதது கண்டிக்கத்தக்கதாகும். 

எனவே, இவ்வறிவிப்பு கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் மேற்படி இடத்தில் உள்ள தங்களுக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்து நகராட்சிவசம் ஒப்படைக்கும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஐப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் இதன் மூலம் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக இந்நகராட்சிக்கு ஏற்படும் சகலவிதமான இழப்புகளுக்கும் தாங்களே முழுப்பொறுப்பாவீர்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் அதிரை நகர ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 08 -01 -24 திங்கள் காலை 10 மணியளவில் கிழமை அதிரை நகராட்சி அலுவலகம் அருகே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், "50 ஆண்டுகால இஸ்லாமிய கல்வி நிலையத்தை முடக்கத்துடிக்கும் அதிராம்பட்டினம் திமுக செயலாளர் திரு ராமகுணசேகரனையும் அதற்கு துணை போகும் நகராட்சி ஆணையரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...