அதிரை இமாம் ஷாபி போராட்டம்.. நற்சான்று கொடுத்த போலீஸ்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளியின் நிலம் மீட்பு போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு நேற்று இரவு அதிகாரிகள் பள்ளியின் சீலையும் பூட்டையும் அகற்றினர். அருகில் வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் பேனர்களும் கிழிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் அதிராம்பட்டினம் பெண்கள், ஆண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் பள்ளி நிர்வாகம், வழக்கறிஞர்கள், போராட்டக் குழுவினர்  மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் காரணமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

முன்னதாக நேற்று இமாம் ஷாபி பழைய பள்ளிக்கு எதிரே அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் அதிரை பிறை சார்பில் ஆப் தி ரெக்கார்டாக பேசினோம். இரவு பணியில் ஈடுபட்டு இருந்த அந்த காவலரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரித்தோம். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் எந்த விதமான அத்துமீறலிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார். வேலூரை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட  அந்த காவலரிடம் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சென்றீர்களா என கேட்டபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் செல்லவில்லை என தெரிவித்தார். இதன் மூலம் அதிரை மக்கள் நடத்திய போராட்டம் நேர்த்தியாகவும் நெறியோடும் நடைபெற்றது என்பது உறுதியாகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...