அதிரை இமாம் ஷாபி விவகாரம்.. இஸ்லாமிய இயக்கங்கள் நடத்த இருந்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளியின் நிலம் மீட்பு போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த 21ம் தேதி இரவு அதிகாரிகள் பள்ளியின் சீலையும் பூட்டையும் அகற்றினர். அருகில் வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் பேனர்களும் கிழிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் அதிராம்பட்டினம் பெண்கள், ஆண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் பள்ளி நிர்வாகம், வழக்கறிஞர்கள், போராட்டக் குழுவினர்  மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் காரணமாக இந்த வெற்றி கிடைத்தது.

இந்த நிலையில் சீல் அகற்றப்பட்டதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிராம்பட்டினம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் (மமக, SDPI, தமுமுக, மஜக, ஐமுமுக, அதிரை தாரூத் தவ்ஹீத்) 
 இணைந்து அதிரை பேருந்து நிலையத்திலிருந்து வண்டிப்பேட்டை வரை இன்று நன்றி தெரிவிப்பு பேரணி நடத்த திட்டமிட்டனர்.

இது தொடர்பாக அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் மனு அளித்தனர். ஆனால் இரண்டு நாட்கள் முன்பாகவே மனு அளிக்க வேண்டும் எனக் கூறி இன்றைய பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. காவல்துறை அனுமதி வழங்கிய பிறகு இந்த பேரணி நடைபெறும் என அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...