அதிரைக்கு பெருமை.. தமிழ்நாடு அணிக்காக கேலோ இந்தியாவில் விளையாடிய AFFA வீரர் ஆதிப்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை பழஞ்செட்டித் தெரு காளிமார்க் சுக்கூர். இவரது மகன் A.S.ஆத்திஃப். அதிரை AFFA கால்பந்து அணி வீரரான இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் அதிரைக்கு பெருமை சேர்த்திடும் வகையில் அகில இந்திய அளவில் நடைபெற்று வரும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியான கேலோ இந்தியா கால்பந்து தொடரில் தமிழ்நாடு  அணிக்காக விளையாட தேர்வாகினார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்வேர்டு வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் போடாத அதன் நிலையில் பெனாலிட்டி கேக் முறையில் வெற்றியை தீர்மானிக்க நடுவர்கள் முடிவெடுத்தனர். இதில் ஒரு கோல் வித்யாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு அணிக்காக கேலோ இந்தியாவில் விளையாட தேர்வான அதிரை வீரருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். முன்னதாக இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைகழகங்களுக்கு இடையிலான தொடரில் கலந்து கொள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கும் தேர்வாகினார் என்பதை அதிரை பிறையில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...