அதிரை மேலத்தெருவில் என்னதான் நடக்கிறது? இந்த வீடியோவை பாருங்க.. குழந்தைகளை காக்குமா நகராட்சி

Editorial
0
அதிரை மேலத்தெரு வடபுறத்தில் மரைக்கா குளத்தை ஒட்டியுள்ள பூங்காவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 25 குழந்தைகள் படித்து வருகிறார்கள். 2, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இங்கு வருகிறார்கள். 
இந்த நிலையில் இதனை சுற்றிலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. டெங்கு, ஃபுளூ உள்ளிட்ட காயச்சல் பரவி வரும் நிலையில் இந்த குப்பைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

வீடியோ:

எனவே இங்குள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு குப்பை கொட்டப்படாத வகையில் முள் வேலி அமைத்துத் தர வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. 9 மற்றும் 10 வது வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...