அதிரை இமாம் ஷாபி பள்ளியில் CMN சலீம் பங்கேற்கும் பெற்றோர், மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

Editorial
0
அதிரை இமாம் ஷாபி மெட்ரிகுலேசன் பள்ளியில் நாளை (நவம்பர் 4 - சனிக்கிழமை) மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி இரு அமர்வாக நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான முதலாவது அமர்வு காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. பெற்றோர்களுக்கான அமர்வு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. 

இதில் சமூக நீதி மாத இதழ் ஆசிரியரும் கல்வியாளருமான சி.எம்.என்.சலீம், பட்டுக்கோட்டை மண்டல வருவாய் அதிகாரி அக்பர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.முஹம்மது இஸ்மாயில் ஆகிய கலந்துகொள்ள உள்ளார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...