அதிரையுடன் மழவேனிற்காட்டை இணைத்தால் பஸ் முன் படுப்போம்.. மக்களின் சாபம் வரும் - ஊராட்சித் தலைவர் எச்சரிக்கை

Editorial
0
அதிரையில் இன்று நடைபெற உள்ள நகர சபை கூட்டத்தில் 3 கிராமங்களை இணைக்கும் தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக மழவேனிற்காடு ஊராட்சித் தலைவர் ராமசந்திரனிடம் அதிரை பிறை சார்பாக தொடர்புகொண்டு பேசினோம்.

அப்போது அவர் தெரிவிக்கையில், "அதிராம்பட்டினம் நகராட்சியுடன் மழவேனிற்காட்டை இணைப்பது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். நூறு நாள் வேலை திட்டம் நின்றுவிடும். அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களே இங்கு அதிகம். இது மிகவும் பின்தங்கிய பகுதி. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வசிக்கும் பகுதி. நூற்றுக்கு 90 பேர் மழவேனிற்காட்டில் பாய்களின் தோப்பில் குடியிருக்கிறார்கள். சொந்த மனை இல்லாதவர்கள். அதிரைக்கு வந்து வேலை செய்கிறார்கள். 

கிராமங்களை இணைத்தால் பேருந்து மறியல் செய்வோம். கிராம மக்கள் கொதித்துபோய் உள்ளார்கள். என்னிடம் தொடர்புகொண்டு அனைத்து மக்களும் இதுபற்றி கேட்கிறார்கள். நான் சொன்னாலும் கிராம மக்கள் ஏற்க மாட்டார்கள். தீர்மான நகலில் உள்ளபடி எந்த மனுவும் நகராட்சிக்கு கொடுக்கப்படவில்லை. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை நகராட்சியுடன் சேர்க்கக்கூடாது என்றுதான் மனு கொடுத்தோம்.

இது நடந்தால் குடிநீர் கட்டணம் மற்றும் அனைத்து வரியும் உயர்த்தப்படும். அதற்கான வருமானம் எங்களுக்கு இல்லை. இது நடந்தால் கிராம மக்கள் என்னை கொன்றுவிடுவார்கள். குடும்பத்துக்கே சாபம் விடுவார்கள். மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். நிச்சயமாக இதை அனுமதிக்க மாட்டோம்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...