அதிரையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம்.. அநீதிக்கு எதிரான பேரமைப்பு அழைப்பு

Editorial
0
பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தியும், பாலஸ்தீனும் இந்தியா நிற்கக்கோரியும் அநீதிக்கு எதிரான பேரமைப்பு அதிரையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் பாலஸ்தீன் - இஸ்ரேல் போரினால் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்த தேவையான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ளாத நிலையில், மருத்துவமனைகளின் மீதும், அகதிகள் முகாம்களின் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனில் தினந்தோறும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்திடவும், இந்திய அரசு பாலஸ்தீனுடன் துணை நிற்கவும் வலியுறுத்தி வரும் நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரபல பேச்சாளரும் வழக்கறிஞருமான ஆலிம் அல் புகாரி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...