அதிரை முகைதீன் ஜும்மாவில் நடைபெற்ற 6வது வார்டு மக்களின் குறைதீர் கூட்டம்

Editorial
0
அதிரை 6 வது வார்டுக்கு உட்பட்ட முகைதீன் ஜும்மா பள்ளியில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆறாவது வார்டு திமுக கவுன்சிலர் கனீஸ் ஃபாத்திமாவின் கணவர் காமில், நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன், நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் 6 வது வார்டு மக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக "ஆலடித்தெரு பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வாய்கால் தெரு பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும். ஆலடிக் குளத்தை ஒட்டி செல்லும் பாதையில் சாலை அமைக்க வேண்டும்." ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...