அதிரையில் புறக்கணிக்கப்படும் 2வது வார்டு.. திமுக உட்கட்சிப் பூசலால் மக்கள் பாதிப்பு! இன்று ஆலோசனைக் கூட்டம்

Editorial
0
அதிராம்பட்டினம் 2வது வார்டு கவுன்சிலராக முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்களின் மனைவி இருந்து வருகிறார். தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராக இருந்து வரும் இவருக்கும் அதிரை திமுக நகராட்சி செயலாளரும் நகராட்சி துணை தலைவர் இராம.குணசேகருக்கும் இடையே பல ஆண்டுகளாக உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது. அதிரையில் திமுகவும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்கள் வார்டை நகராட்சி புறக்கணிப்பதாக கூறி சில மாதங்களுக்கு முன் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அதிரை 2வது சி.எம்.பி லேன் பகுதியில் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதி மக்களே தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சாலை, கழிவு நீர் வடிகால், தெரு விளக்குகள், சி.எம்.பி வாய்க்கால் பராமரிப்பு, வெறிநாய்களை கட்டுப்படுத்துவது போன்ற அடிப்படை தேவைகள் எதையும் நகராட்சி முறையாக செய்யவில்லை என்றும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று ஹனீப் பள்ளியில் 2வது வார்டு மக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "2வது வார்டு புறக்கணிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும், இன்சா அல்லாஹ் முதல் அமர்வு வருகின்ற வெள்ளிக்கிழமை 29-09-2023 அன்று புறக்கணிக்கப்பட்ட 2வது வார்டு சம்மந்தமாக இஷா தொழுகைக்கு பிறகு ஹனிப் பள்ளியில் கூட்டம் நடைபெறும். தயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...