அதிரையில் ரோதனையான மின் தடை.. களமிறங்கும் SDPI! விரைவில் ஆர்ப்பாட்டம்

Editorial
0

நாள்தோறும் அதிரையில் மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் முதல் அதிரையில் அறிவிக்கப்படாத மின் தடை தொடர்ந்து வருகிறது. அதிரை மின் நிலையத்தை 110Kv ஆக தரம் உயர்த்தும் பணிகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. இதற்கிடையே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு மின் தடை செய்யப்படுகிறது.

தற்போது கோடை காலத்துக்கு இணையாக வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் மின் வெட்டு கூடுதல் தலைவலியாக மாறி உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகவே அதிராம்பட்டினத்தில் இரவு நேர மின் தடை தொடர்கிறது. 

அதிரையில் நேற்று இரவு 8-9 மணியில் இருந்தே பல இடங்களில் மின் தடையும், குறைந்த மின்சாரமும் வழங்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் சேக்தாவூது வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "இன்ஷா அல்லாஹ் அதிராம்பாட்டினம் மின்வாரியத்தை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக விரைவில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்படும். அதிரைக்கு விடியல் வேண்டும் என்றால் நமது ஊர் மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...