அதிரை மக்களே "அலர்ட்".. இன்றே கடைசி நாள்! ஒரே கிளிக்கில் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள்

Editorial
0

பொது சிவில் சட்டத்திற்கான பணிகளை மத்திய அரசு  தொடங்கி இருக்கிறது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றில் இஸ்லாமியர்கள் பின்பற்றிவரும் ஷரீஅத் சட்டம் ஒழிக்கப்பட்டு பொது சட்டம் வரும்.

பொது சிவில் சட்டம் குறித்து பொது மக்களிடம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டிருக்கிறது. அதற்கான கால அவகாசம் இன்றைக்குள் (14.07.2023) நிறைவடைகிறது.

இது தொடர்பாக நமது கடமையை ஆற்றுவது மிக அவசியம் ஆகும். எனவே இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு மெயில் ஐடி இணைக்கப்பட்டுள்ளது. அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஒரு கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

சில நாட்களிலேயே இந்த லிங்கின் மூலமாக மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இன்றோடு இந்த அவகாசம் முடிவடையும் நிலையில் எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் கீழே உள்ள SUBMIT பட்டனை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் ஜிமெயில் ஓபன் ஆகும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மெயில் சென்றுவிடும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...