அதிரை 6வது வார்டில் முன்மாதிரி சாலை.. தோண்டப்படும் பழைய ரோடு! கரார் காட்டும் கவுன்சிலர்

Editorial
0
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின், "சென்னையில் சாலை பணிகளை இரவில் ஆய்வு செய்து, ‘மில்லிங்’ (பழைய சாலையை தோண்டாமல்) செய்யாமல் சாலை போடக் கூடாது அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்." என்று எச்சரித்தார்.
ஆனால் பலரும் அதை கடைபிடிக்காமல் மில்லிங் செய்யாமல் சாலை அமைத்து வருகிறார்கள். குறிப்பாக அதிராம்பட்டினத்தில் ரூ.2.5 கோடி செலவில் அமைக்கப்படும் சி.எம்.பி. லேன் சாலையும் பழைய சாலையை தோண்டாமல் அமைக்கப்படுகிறது. இப்படி இருக்க அதிரை 6 வது வார்டில் பழைய சாலையை தோண்டி எடுத்து அதே மட்டத்தில் புதிய தார் சாலை அமைத்து வருகிறார்கள். 

அதிரை ஆலடித்தெரு, அம்பேத்கர் நகர் பகுதிகளில் 240 மீட்டரில் அமைக்கப்படும் இந்த சாலைக்காக பழைய குண்டும் குழியுமான சாலை ஜேசிபி மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது. அதிரை 6வது வார்டு கவுன்சிலர் கனீஸ் பாத்திமாவின் கணவர் காமில் சாலை பணி நடைபெறும் இடத்தில் நின்று மில்லிங் செய்துதான் சாலை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அதை கண்காணித்தும் வருகிறார். 
இது குறித்து அவர் நம்மிடம் பேசுகையில், "முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க பழைய சாலையை தோண்டிவிட்டு புதிய தரமான சாலை அமைக்கிறோம். இங்கு தோண்டி எடுக்கப்படும் பழைய சாலை, கற்களை பள்ளமாக இருக்கும் அதிரை வாய்க்கால் தெரு அரசு நடுநிலை பள்ளியில் மழை நீர் தேங்காத அளவுக்கு கொட்டி வருகிறோம்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...