அதிரையில் அதிகாலையை மேலும் அழகாக்கும் கொக்குகள்.. படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

Editorial
0
அதிராம்பட்டினம் அலையாத்திக் காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளான கரையூர் தெரு, காந்தி நகர், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ஆகிய கடல்பகுதிகளில் கடலுக்கு சென்று விட்டு திரும்பும் மீனவர்கள் மீன்களை தரம் பிரிக்கும்போது சிறிய வகை மீன்களை துறைமுக ஓரத்தில் வீசுவார்கள். இந்த மீன்களை வெளிநாட்டு பறவைகள் உணவாக உட்கொள்ளும். 

இந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் அதிராம்பட்டினம் கடற்கரைக்கு சிறிய கொக்கு, பெரிய கொக்கு, நீலவால் இலை கோழி, வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக பெரிய கொக்குகளின் வருகை அதிகரித்து வருகிறது. சூாியன் உதிக்க தொடங்கும் அதிகாலை பொழுதில் கடற்கரையை சுற்றி கூட்டம் கூட்டமாக பறக்கும் இந்த கொக்குகள் காண்போரை கவர்கின்றன. 

அதிகாலை நேரத்தில் பறவைகள் இரை தேடிவிட்டு வெயில் அடிக்க தொடங்கும் போது கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் அலையாத்தி காட்டுக்குள் புகுந்து விடும். அதிராம்பட்டினத்திலிருந்து அலையாத்தி காடு தொடங்கி முத்துப்பேட்டை வழியாக தொண்டியக்காடு வரை சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை ஒரத்தில் சதுப்பு நிலப் பகுதி உள்ளது. இங்குள்ள அலையாத்தி காடுகளில் மரங்கள் உயரமாகவும் அடர்த்தி மிகுந்தும் உள்ளது. மேலும் இந்த காடுகள் புவியியல் அமைப்பில் ஈரப்பதம் உள்ள காடு என்று ஆராய்ச்சில் குறிப்பிட்டுள்ளது.

இதனால் சைபிரியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செங்கால் நாரை, கூழக்கிடா, கடல்ஆழா, மயில்கால் கோழி, பனங்கொட்டை சிறவி, பாம்புதாரா, நத்தகொத்திநாரை, பவளக்கால் உள்ளான், பூநாரை, சாம்பல்நாரை, நாமக்கோழி, வெள்ளைகொக்கு என பல வகையான வெளிநாட்டு பறவைகள் அலையாத்தி காடுகளுக்கு வருகை தருகின்றன.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...