அதிரையில் இப்படியும் ஒரு ஹோட்டல்.. ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் தாவூத்

Editorial
0
அதிரையை சேர்ந்தவர் தாவூத். இவர் நமதூர் கடைத்தெருவில் அல் மதீனா என்ற பெயரில் பல ஆண்டுகளாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையின் சுவையான பரோட்டாவும் சால்னாவும் நமதூர் மக்கள் பலருக்கு விருப்பமானதாக உள்ளன.
ஏராளமானோர் இவரது உணவகத்தில் பரோட்டா வாங்கிச் செல்கின்றனர். சில உணவகங்கள் ₹12 க்கு பரோட்டா விற்பனை செய்து வரும் நிலையில் இவர் ₹10க்கு அளவை குறைக்காமல் பரோட்டா விற்கிறார். இவர் தனது கடையில் வெளிப்படையாகவே "சாப்பாடு வாங்க முடியாதவர்கள் இலவசமாகவே சாப்பிட்டுக் கொள்ளட்டும். இது இறைவனின் சொத்து." என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இது குறித்து தாவூத் அவர்களிடம் நாம் பேசியபோது, "ஏழைகள் சாப்பிடுவதால் நமக்கு நன்மைதான். இயலாதவர்கள் யார் என்று தெரிந்து கொடுக்கிறோம்." என்று அலட்டிக்கொள்ளாமலும், இதை பெருமையாக கருதாமலும் கூறினார். தாவூத் அவர்களின் இந்த மகத்தான சேவை பாராட்டிற்குரியது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...