![]() |
மாஹிர் |
நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களிடையே நடக்கும் தண்ணீர் சிக்கல் இப்போது அதிராம்பட்டினம் நகராட்சி எல்லையில் உள்ள இரண்டு குளம், வடிகால் வரை வந்துள்ளது.
கடந்தாண்டு ஆலடிக்குள வடிகாலுக்கு நடந்த பெரிய டிராமாவும் அதனால் ஏற்பட்ட சமூகப்பதற்றம் தற்போது இரண்டாமாண்டாக தொடர்கிறது.
உலக அதிசயமாக, பம்பிங் செய்யும் தண்ணீர் வடிகாலில் ஓட வேண்டியது, வடிகால் காணாமல் போனதால், அரசாணை 540ன் கீழ் கொடுத்த மனுக்கள் தூங்குவதால், இன்னொரு குளத்துக்கு தண்ணீர் ஓடுகிறது.
பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்தால், வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தேவையற்ற சலசலப்பை நகராட்சி நிர்வாகம் மீண்டும் வேடிக்கை பார்க்கிறது.
மன்னப்பன் குளத்தை குத்தகைக்கு எடுத்தவர் முறையாக குளத்தில் வடிகாலை தெரிந்து கொள்ளாமல், இன்னொரு குளத்திற்கு தண்ணீரை விட்டு சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவது நியாயமா?
0 Comments