அதிரையில் பாதிக்கப்பட்ட பதநீர் தொழில்.. கோடை மழையால் வேதனை

Editorial
0

அதிரையை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. வெயில் காலமான தற்போது பதநீர் இறக்கும் தொழில் மும்முரமாக நடந்து வந்தது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது.

விளம்பரம்: 

பனைமரங்கள் மீது ஏறி நன்கு வளர்ந்து நிற்கும் பாலை பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்ட மண்பாண்ட கலயத்தை பனை மரத்தில் கட்டி தொங்க விட்டு, கலயத்திற்குள் விடப்பட்டு உள்ள பாலைக்கு அருகில் வளர்ந்து நிற்கும் பனை ஓலைகளை வெட்டி விடுவார்கள். 

ஒரு நாளைக்கு 3 முறை இந்த கலயம் கட்டி விடப்பட்டுள்ள பனை மரத்தின் பாலையை வெட்டி சீவி விடப்படும். ஒரு நாள் கழித்து பனை மரத்தில் ஏறி கலயத்தில் சேர்ந்திருக்கும் பதநீரை சேகரித்து அதை விற்பனை செய்வது வழக்கு. ஆனால் தற்போது மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் பதநீர் இறக்கும் கலயத்தில் மழைநீர் சேர்ந்து விடுவதால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...