அதிரை மின்சார வாரியம் தொடர்பாக மின்துறை அமைச்சரிடம் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. கோரிக்கை

Editorial
0

அதிராம்பட்டினத்தில் தொடரும் மின்வெட்டை தடுக்க 110kv துணை மின்நிலையம் அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளை தொடங்க மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. கா.அண்ணாதுரை கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் வீடுகள் தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ள காரணத்தால் அங்குள்ள 33kv துணை மின்நிலையத்தில் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி மின் பழுதுகளும், தொடர் மின் தடைகளும் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில், அங்கு 110kv திறன்கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டு டெண்டர் கோரப்படாமல் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. 

இதுகுறித்து பட்டுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுறையை சந்தித்து அதிராம்பட்டினம் மக்கள் மனு வழங்கினர். இதனை தொடர்ந்து இன்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அதிராம்பட்டினத்தில் 110kv துணை மின் நிலையம் அமைப்பதற்கு டெண்டர்கோரும் பணிகளை தொடங்க எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...