பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அதிரையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலையை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த விலை உயர்வை கண்டித்து அதிராம்பட்டினத்தில் 4 இடங்களில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நான்கு இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிர்வாகிகள் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் சேக் தாவுது அவர்கள் மற்றும் அதிரை நகர தலைவர் அஹமது அஸ்லம் அவர்கள் மற்றும் நகர செயலாளர் சாகுல் ஹமீத் அவர்கள் மற்றும் நகர இணைச் செயலாளர் அகமது அவர்கள் மற்றும் நகர செயற்குழு உறுப்பினர் ஜர்ஜிஸ் அகமது அவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஜமால் முஹம்மது அவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்தி முடித்தனர்.
0 Comments