அதிரையில் வீட்டுக்குள் புகுந்த மழை நீர்... பேரூராட்சி மீது புகார்

Editorial
0

அதிரை ஈ.சி.ஆர் சாலையிலிருந்து கடற்கரைத் தெரு செல்லும் வழியில் அமைந்துள்ள ஹாஜா நகரின் ஒரு சிறு பாதையில் சில மாதங்களுக்கு முன் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலைக்காக அங்குள்ள கழிவுநீர் வடிகாலை அடைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.




இதையும் மீறி சாலை அமைக்கப்பட்டதால் லேசான மழைக்கே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடுவதாக அப்பகுதியை சேர்ந்து பஷீர் குற்றம்சாட்டுகிறார். இன்று அதிகாலை மழை பெய்தவுடன் வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பல முறை பேரூராட்சியில் புகாரளித்தும் இதுவரை தீர்வு எட்டவில்லை என அவர் குற்றம்சாட்டுகிறார்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...