தாமரை இலை கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.ரங்கராஜனுக்கு அதிரை மக்கள் ஆதரவு கிடைக்குமா?

Editorial
0


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதனிடையே ஆளும் அதிமுக நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே பட்டுக்கோட்டை தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக நேற்று நமது அதிரை பிறை தளத்தில் பதிவிட்டோம்.

இந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் த.மா.கா போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளராக மூன்று முறை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவாக இருந்த ரங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு முன் அதிரை மக்களின் ஏகோபித்த ஆதரவால் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்ற ரங்கராஜன், இம்முறை தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதால் மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே...

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...