அழுத்தங்களுக்கு அடிபணிந்த திமுக... சிஏஏவுக்கு எதிராக தேர்தல் அறிக்கையில் மாற்றம்

Editorial
0



தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இன்று திமுக சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் இஸ்லாமியர்களின் எந்த கோரிக்கைக்கு உத்திரவாதம் அளிக்கப்படவில்லை.

இதையெல்லாம் கடந்து அதிர்ச்சிதரும் விசயமாக அமைந்துள்ள திமுகவின் சி.ஏ.ஏ. குறித்த வாக்குறுதி. CAA வில் குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகள் மட்டுமல்லாமல் நான்காவது நாடாக இலங்கையையும் சேர்க்க வேண்டும் என மத்தியரசை வலியுறுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திமுக தன் ஆட்சி அமைந்ததும் கண்டிப்பாக எதிர்த்து பேசுவார்கள், சட்டப்பேரவையில் CAA-வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்று நம்பிய இஸ்லாமிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நேற்று நாம் வெளியிட்ட கட்டுரை: https://www.adiraipirai.com/2021/03/caa.html

இந்த நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள - வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத்  திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்;  வாக்குறுதி 367-ல், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித்துறைமுகம் அமைக்க  அனுமதிக்கப்பட மாட்டாது” என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்:                        

“ * இந்தியக்  குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். * இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத்  தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்." 


மேற்கண்ட திருத்தங்களைப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்   2019-ஐப் பொறுத்தவரை, அதை  தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி - நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று - அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்திருக்கிறது. 

அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு - அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் கழகம்  அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...