அதிரையில் ஆள் உயரத்துக்கு தோண்டப்பட்ட கரிசல்மணி ஏரி... SDPI கட்சியினர் முற்றுகை (வீடியோ)

Editorial
0
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் படி ஏரி, குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதித்து, தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.22.91 கோடி ஒதுக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிரை கரிசல்மனி ஏரியில் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மேற்பட்ட டிராக்டர்களில் மண் அள்ளி வருகிறார்கள். 
அரசு 3 அடி ஆழத்துக்கு விவசாய தேவைக்காக வண்டல் மண் மட்டுமே அள்ள சொல்லி இருக்கும் சுமார் 6 அடிக்கு மண்ணை எடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து இன்று காலை அதிரை பிறையில் செய்தி வெளியிட்டோம்.
இதனை தொடர்ந்து கரிசல்மணி ஏரிக்கு அதிரை SDPI கட்சியினர் சென்று பார்த்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியது தெரியவந்தது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது இன்றுடன் ஒப்பந்தநாள் முடிவடைவதாகவும் பணிகளை நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஆனால், முறையற்ற வகையில் பள்ளம் தோண்டப்பட்டதால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் ஏரியை சமன் படுத்துமாறு தெரிவித்தனர். தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் விபரஙகள் விரைவில் வெளியிடப்படும்


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...