அதிரை ECR சாலையில் மீண்டும் விபத்து.. பைக் மீது மோதிய லாரி - பெரும் பரபரப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் இளைஞர்களின் பைக் மோதி ஏராளமானோர் படுகாயம் அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக இருவர் இதனால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அதிரை ஈசிஆர் சாலை மற்றும் சேர்மன்வாடி அருகே விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் இன்று அதிரை கிழக்கு கடற்கரை சாலை காதிர் முகைதீன் கல்லூரி அருகே இருவர் பைக்கில் நின்று கொண்டு இருந்தபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் இருந்த இருவரும் உயிர் தப்பினர். லாரி பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வந்ததால் விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர் கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...