அதிரையில் CAA வை எதிர்த்து இன்று வெடிக்கும் ஆர்ப்பாட்டம்.. இஃப்தாருக்கு பிறகு பேருந்து நிலையத்துக்கு அழைக்கும் மஜக

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
மக்களவை தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளும் வெளியிடப்பட்டன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையை அளிக்கும் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டாலும் நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் முஸ்லிம்கள் இன்று முதல் ரமலான் மாத வழிபாடுகளை தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில் அதிரையில் நாளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (12-03-2024) இப்தார் முடிந்த பிறகு பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...