அதிரையில் பரபரப்பு.. ஆனைவிழுந்தான் குளத்தை புல்டோசர் மூலம் மூடும் நகராட்சி

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

அதிரை அரசு மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் தங்குவதற்கும், அரசு மருத்துவர்கள் தங்குவதற்காகவும் கட்டிடம் கட்டும் பணி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. இதற்காக அங்கிருந்த  புதர்கள் தற்பொழுது வெட்டி அகற்றப்படுகின்றன.

இவ்வாறு அகற்றப்படும் புதர்களையும் குப்பைகளையும் அருகில் உள்ள ஆணைவிழுந்தான் குளத்தில் நகராட்சியின் ஜேசிபி மூலம் கொட்டி வருகிறார்கள். நீர் நிலையை பாதுகாக்க வேண்டிய அதிரை நகராட்சியே இப்படி நீர் நிலையை குப்பைகள் மற்றும் புதர்களை கொட்டி மூடுவது எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...