அதிரை மக்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை.. நாளை ரயில் தண்டவாளம் பக்கமே போயிடாதிங்க

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
நாளை 13/02/2024 செவ்வாய் அன்று பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் திருவாரூர் - காரைக்குடி இடையே ஓ.எம்.ஸ்  அதிவேக சோதனை ஓட்டம்  (121 கீமீ) நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே 121 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ரயில் செல்லும்.

இந்த ரயில் பாதை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்பு பாதைகளை கடப்பது, ரயில் பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது, மூடி இருக்கும் ரயில்வே கேட் வழியாக  நடந்து செல்வது, இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, வேகமாக செல்லும் ரயில் அருகில் சென்று செல்போன் மூலம் போட்டோ ,வீடியோ, செல்ஃபி எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ரயில் பாதை அருகில் செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...